போர்வாளை கொண்டு நகம் வெட்டுவதா...!
’இன்று இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சி எங்கோ போய் விட்டது...’ என பலரும் பெருமையடித்துக் கொள்கிறோம். உண்மைதான். அதில் எள்ளளவும் யாருக்கும் சந்தேகம் இல்லை. இதை யாரும் மறுக்கப் போவதும் இல்லை. ஆனால் இந்த தொழிநுட்ப வளர்ச்சியை நாம் எவ்வளவு தூரம் பயன்படுத்துகிறோம்; அதனால் நாம் எவ்வளவு தூரம் நம்மை வளர்த்துக் கொள்கிறோம் என சிந்திக்க ஆரம்பித்தால் கிடைக்கும் பதில் திகைப்பாகவே இருக்கிறது.



