தேவையானப் பொருட்கள்:
புழுங்கல் அரிசி (இட்லி அரிசி) - 4 ஆழாக்கு
பொட்டுக்கடலை - 1 கப்
நெய் அல்லது வனஸ்பதி
அல்லது வெண்ணெய் - 2 மேஜைக் கரண்டி (டேபிள் ஸ்பூன்)
மிளகாய் வற்றல் - 15
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி (டீஸ்பூன்)
உப்பு - தேவையான அளவு
வெள்ளை எள்ளு - 2 தேக்கரண்டி (டீஸ்பூன்)
செய்முறை:
அரிசியை 2 அல்லது 3 மணிநேரம் ஊற வைக்கவும். பின்னர் அரிசி, மிளகாய் வற்றல், பெருங்காயம் கலந்து நைசாக தோசை மாவுப் பதத்தில் அரைத்துக் கொள்ளவும். கடைசியாக உப்பு சேர்த்து எடுக்கவும். பொட்டுக்கடலையை மிக்ஸியில் நைசாக பொடி செய்து, சலித்து அரைத்து வைத்த மாவுடன் கட்டித் தட்டாமல் கலக்கவும். பின்னர் நெய், வெள்ளை எள்ளு கலக்கவும்.
ஈர டவலைத் தரையில் பரப்பி அதில் மொத்த மாவையும் கொட்டி மூட்டைப் போலக் கட்டி நன்கு உருட்டவும். இப்படி செய்யும்போது அதிகப் படியான ஈரப்பதத்தை டவல் உறிந்துக் கொண்டு மாவு சப்பாத்தி மாவுப் பதத்திற்கு வந்து விடும். அதை முறுக்கு அச்சில் போட்டு காய வைத்த எண்ணெயில் பொன்னிறமாக பொறித்தெடுக்கவும்.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|



