maniyosai.com

You are here: Home பொது சத்தியசோதனை சத்தியசோதனை-பகுதி 2

சத்தியசோதனை-பகுதி 2

E-mail Print PDF
Share/Save/Bookmark

இளம் வயது நினைவுகள்::

போர்பந்தரிலிருந்து ராஜ்காட்டிற்கு அப்பா மாற்றல் ஆகும் போது எனக்கு ஏழு வயது இருக்கும். அங்கு என்னை ஆரம்ப பள்ளியில் சேர்த்தார்கள். என் ஆசிரியைகள் பெயர்கள் உட்பட அனைத்தும் என் நினைவில் பசுமையாக உள்ளன. படிப்பில் நான் சொல்லிக் கொள்ளும் அளவு இல்லை. சுமார்தான். பள்ளி பருவத்தில் ஒரு சிறிய பொய் சொன்னதாக கூட எனக்கு நினைவில்லை. எனக்கு கூச்ச சுபாவமும் அதிகம். புத்தகங்கள் மட்டுமே என் நண்பர்கள். பள்ளி விட்டவுடன் வீட்டுக்கு ஓடி விடுவேன். 'ஓடி விடுவேன்' என்பது மிகையில்லை. என்னை யாராவது கேலி செய்து விடுவார்களோ என்ற பயம்.

என் பள்ளிக்கூட நாட்களில் நடந்த ஒரு தேர்வை இங்கு அவசியம் குறிப்பிட வேண்டும். திரு. கைல்ஸ் (Giles) பள்ளிக்கூட இன்ஸ்பெக்‌ஷனுக்கு வந்திருந்தார். ஐந்து வார்த்தைகளை சொல்லி எழுத சொன்னார். அதில், kettle என்பது ஒரு சொல். நான் அந்த சொல்லை எழுதும் போது எழுத்துப் பிழை செய்து விட்டேன். ஆசிரியர், தன் காலால் என் காலை மிதித்து, பக்கத்து மாணவனிடமிருந்து காபி அடிக்கும் படி சமிக்ஞை செய்தார். நான் அதை கண்டுக் கொள்ளவில்லை. என்னை தவிர அனைத்து மாணவர்களும் அந்த சொல்லை சரியாக எழுதியிருந்தனர். எனக்கு மட்டும் அவ்வளவு சாமர்த்தியம் போதவில்லை. அவர் பல முறை சொல்லியும் ‘காப்பி' அடிக்கும் கலை எனக்கு கை கூடவில்லை.

இதே காலக்கட்டத்தில் நடந்த இன்னும் இரண்டு நிகழ்ச்சிகள் என் நினைவில் உள்ளன. என் பள்ளி பாடநூல்களை தவிர பிற புத்தகங்களை படிக்கும் பழக்கம் எனக்கு இருந்ததில்லை.

மற்றொரு நாடகம். ஒரு நாடக குழு நடத்திய நாடகத்தை பார்க்க என் அப்பாவிடமிருந்து அனுமதி பெற்றேன். அந்த நாடகம்தான் ஹரிச்சந்திரா. ‘ஏன் அனைவரும் ஹரிச்சந்திரனாக இருக்க கூடாது?' என்று நாடகம் பார்த்தது விட்டு என்னை நானே கேட்டுக் கொண்டேன். இடர்கள் வந்தாலும் வாய்மையை கை விடாத ஹரிச்சந்திரனின் கதை என்னை மிகவும் கவர்ந்தது. ஹரிச்சந்திரன் நாடகத்தைப் பார்த்து நான் தேம்பி அழுதேன். என் வாழ்க்கையின் பாதையை மாற்றியவர்கள் ஹரிச்சந்திரனும், ஷ்ராவணனும்.




Want to write for Maniyosai?

 


More and More


கிட்டதட்ட

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

72.2%
27.8%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 167 Hits