maniyosai.com

You are here: Home பொது சத்தியசோதனை சத்தியசோதனை-பகுதி 9

சத்தியசோதனை-பகுதி 9

E-mail Print PDF
User Rating: / 0
PoorBest 

அசைவம் சாப்பிட்டு வந்த காலக் கட்டத்தில் நான் செய்த இன்னும் சில அக்கிரமங்களை  நான் பகிர்ந்துக் கொள்ள வேண்டும்.

நானும், என் உறவினர் ஒருவரும் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமை ஆனோம்.  வாயிலிருந்து மேகமூட்டம் போல் புகை விடுவதில் ஒரு பரவசம். புகை பிடிக்கும் எங்கள்  மாமாவை பார்த்து இந்த ஆசை எங்களை தொற்றிக் கொண்டது. ஆனால், சிகரெட் வாங்க  எங்களிடம் காசு இருந்ததில்லை. அதனால், எங்கள் மாமா புகைத்து விட்டு எறியும் மிச்ச  மீதி சிகரெட்டுகளை நாங்கள் சேகரித்து பயன் படுத்தி வந்தோம்.

அந்த பயன் படுத்திய சிகரெட்டுகள் எப்பொழுதுமே எங்களுக்கு கிடைக்காது. அதிலிருந்து,  அவ்வளவாக புகையும் வராது. இதனால், சிகரெட் வாங்க, வேலைக்காரன் வைத்திருக்கும்  காசை திருட ஆரம்பித்தோம். சில நாட்களுக்கு இந்த திருட்டு பழக்கத்தால், எங்கள்  புகைக்கும் ஆசை நிறைவேறியது. ஒரு குறிப்பிட்ட மரத்தின் இலைகளை காய வைத்து  சிகரெட் போல் பயன் படுத்தலாம் என கேள்விபட்டு அதை செய்ய ஆரம்பித்தோம்.

பெரியோர்களின் அனுமதி இல்லாமல் எவ்வளவு நாட்களுக்கு புகைப்பது? சுதந்திர வேட்கை  எங்களை படுத்தவே, விரக்தியில், தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்தோம்.

ஆனால், எப்படி தற்கொலை செய்வது? எங்கிருந்து விஷம் எங்களுக்கு கிடைக்கும்? அரளி  விதை விஷத் தன்மை உடையது என்று கேள்வி பட்டு, காடுகளில் அந்த விதைகளை தேடி  அலைந்தோம். எங்கள் தேடுதலின் பலனாக அரளி விதை கைக்கு எட்டியது. தற்கொலை  செய்து கொள்ள, மாலை வேளையே உகந்த நேரம் என முடிவு செய்தோம். கேதார்ஜி  ஆலயத்திற்கு சென்று நெய் விளக்கேற்றி தரிசனம் பண்ணினோம். ஆனால், தற்கொலை  செய்து கொள்ள தைரியம் வரவில்லை. ஒரு வேளை, உடனே சாகவில்லையென்றால்..?  தற்கொலை செய்து கொள்வதால் என்ன பயன்? இப்படி பல குழப்பங்களுக்கு ஆளானோம்.  இருந்தும், 3 அரளி விதைகளை விழுங்கி விட்டோம். அதற்கு மேல் சாப்பிட தைரியம்  வரவில்லை. ராமர் கோயிலுக்கு சென்று தற்கொலை எண்ணத்தை கை விட எண்ணினோம்.
தற்கொலை செய்து கொள்வது அவ்வளவு எளிதல்ல என்பதை அப்போது நான்  உணர்ந்தேன். அந்த சம்பவத்திற்கு பிறகு யாராவது தற்கொலை செய்து கொள்வதாக  மிரட்டினால் நான் அசட்டை செய்து விடுவேன்.

தற்கொலை செய்யும் எண்ணம் எங்களை சிகரெட் புகைக்கும் ஆசையை கை விட  வைத்தது. வளர்ந்த பிறகும், புகைக்கும் ஆசை எனக்கு வந்ததில்லை. புகைப்பது,  அசிங்கமான, காட்டுமிராண்டி தனமான செயல் என்பது என் அபிப்ராயம். புகைக்கும் பழக்கம்  எப்படி உலகம் முழுதும் பரவியது என எனக்கு தெரியவில்லை. ரயில் பயணத்தின் போது  சக பயணி புகைத்தால் கூட மூச்சு முட்டும்.

சாதாரண சில்லறை காசுகளை நான் திருடி வந்ததை விட மோசமான திருட்டில் நான்  ஈடுபட்டேன். தங்கத்தை திருடினேன்.


 


More and More


Banner

கிட்டதட்ட

01 September 2010, 21.20 தலைப்புச் செய்திகள்
காமன்வெல்த் போட்டிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள்: சிதம்பரம் மேற்பார்வை
புதுதில்லி: அக்டோபர் 3 முதல் 14ம் தேதி நடக்கவிருக்கும் காமன்வெல்த்...மேலும்...
0 Comments , 12 Hits
01 September 2010, 17.42 தொழில்நுட்ப செய்திகள்
பிளாக்பெரியை தொடர்ந்து கூகுளுக்கும் நோட்டீஸ்: மத்திய அரசு முடிவு
புதுதில்லி: பிளாக்பெரியைத் தொடர்ந்து கூகுள் மற்றும் ஸ்கைப்...மேலும்...
0 Comments , 26 Hits
26 June 2010, 18.50 தலைப்புச் செய்திகள்
இந்தியாவுடன் சேர்ந்து தீவிரவாதத்தை ஒழிப்போம்: பாக். உறுதி
இஸ்லமாபாத்: இந்தியாவுடன் இணைந்து தீவிரவாதத்தை ஒழிக்க பாக்கிஸ்தான்...மேலும்...
0 Comments , 42 Hits
02 September 2010, 20.06 தலைப்புச் செய்திகள்
காங்கிரஸ் தலைவராக சோனியா போட்டியின்றி தேர்வு
புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி தொடர்ந்து...மேலும்...
0 Comments , 17 Hits

திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என விஜயகாந்த் சொல்வது...

<

மருத்துவம்

ஹெல்த் ப்ளஸ் - மெட்ராஸ் ஐ வராமல் தடுப்பது எப்படி?
’மெட்ராஸ் ஐ’ அவ்வப்போது வந்துப்போகும் அழையா விருந்தாளி....மேலும்
0 Comments , 33 Hits
ஹெல்த் ப்ளஸ் - நமீதா டூ திரிஷா
நாம் தீவிரமாக செய்கிறோமோ இல்லையோ, எடைக் குறைத்தல் பற்றி...மேலும்
1 Comment , 303 Hits
ஹெல்த் ப்ளஸ் - கோடையை சமாளிக்க சில வழிகள்
கோடை காலம் வந்தாலே குழந்தைகளுக்கு ஒரே கொண்டாட்டம்தான். 2...மேலும்
4 Comments , 233 Hits

Feedback Form
Feedback Analytics