’என் கண்களை என்னாலேயே நம்பமுடியவில்லை. வித்யாவா அது? கோயில் பிரகாரத்தில் கணவன், மாமனார், மாமியார், நாத்தனார் என குடும்பத்தோடு அமர்ந்து சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருக்கிறாள். அட! உலகில் அதிசயங்கள் பல நடக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் இப்போதுதான் நேரில் பார்க்கிறேன்....’
நானும் வித்யாவும் ஒரே பள்ளி, கல்லூரியில் படித்தவர்கள். சற்றே நெருங்கிய தோழிகள். வித்யா நன்றாகப் படிப்பாள். விளையாட்டிலும் அவள்தான் ஃபர்ஸ்ட். சில பேச்சுப் போட்டிகளில் கூட கலந்துக் கொண்டு முதல் பரிசு வாங்கியிருக்கிறாள். எல்லாவற்றிலும் தான் தான் முதலாவதாக இருக்கவேண்டும் என்ற பிடிவாதம். படிப்பு முடிந்த கையோடு அவளது திருமணம் நடந்தது. எனக்கு மும்பையில் வேலைக் கிடைத்தது. போன வருடம் விடுமுறைக்கு வந்தப்போது, அவளைப் பார்க்க அவள் வீட்டிற்கு சென்றேன்.
Last Updated on Sunday, 28 February 2010 12:58
Read more...