இருநூறு ரூபா நோட்டு
“நா ஒண்ணு கேட்டா தப்பா நெனச்சிக்கமாட்டீங்களே?” என்ற பலத்த பீடிகையுடன் ஆரம்பித்தாள் வித்யா.
வித்யா பற்றி சொல்வதற்கு ஒன்றும் அதிகமில்லை. இளம்பெண். இப்பொழுதுதான் கல்லூரி படிப்பை முடித்துள்ளாள். இளம்பெண், கல்லூரி, கில்லூரி என்றெல்லாம் சொன்னவுடன் உலக அழகி அவள்தான் என்று கற்பனை செய்ய வேண்டாம். பார்க்க மிக சுமாராகத்தான் இருப்பாள். குடும்ப வறுமைக் காரணமாக இப்பொழுது வேலையில் சேர்ந்து பத்து நாட்கள் ஆகிறது.
“இல்ல சொல்லுங்க.” என்றேன்.








