அடடா என்ன அழகு!
தென்னங் கீற்றுகள் தென்றலில் ஆடிட
தெரிந்தது நிலவின் தெவிட்டா அழகு!
இன்னும் கொஞ்சம் இன்னமும் கொஞ்சம்
எழிலைப் பருக விழைந்தது நெஞ்சம்!
முன்னும் பின்னும் தென்னை அசைய
முகிலும் துகிலாய் முகர்ந்திட அவளை
என்னுள் மிகுந்தது ஏக்கமும் தாக்கமும்
ஏங்கினேன் இரவெல்லாம் காண்கிலேன் தூக்கமும்!








