
ஓடுகிறோம்,ஓடுகிறோம்
மாரத்தான் ஓடுகிறோம்.
உலகம் மாறத்தான் ஓடுகிறோம்
நல்லவை கூறத்தான் ஓடுகிறோம்;
நடிகைகளும்,நடிகர்களும்,
முதியவரும்,சிறியவரும்
ஒரு சேரத்தான் ஓடுகிறோம்.
காவல் துறையின் அனுமதியோடும்
காவலோடும்தான் ஓடுகிறோம்;
அனாதை குழந்தைகளுக்காக ஓடுகிறோம்
அகில உலக அமைதிக்காக ஓடுகிறோம்;
காலை நேரம் தான் ஓடுகிறோம்
காலம் நேரம் பார்த்துதான் ஓடுகிறோம்
அதுவும் ஞாயிறு காலை தான் ஓடுகிறோம்;
சென்னைவாசிகளே சற்று பொறுத்தால்தான் என்ன ?
போக்குவரத்து ஸ்தம்பித்தால் என்ன?
சாலையில் செல்வதையும்
சாலைகளைக் கடப்பதையும் சற்றுத் தள்ளிப் போட்டால்தான் என்ன?
விமானம் பிடிக்கவா போகிறீர்கள்:
அல்லது இரயிலை பிடிக்கப் போகிறீர்களா?
ஒரு சில மணி நேரங்கள் பொறுத்தால் தான் என்ன?
அட; அவசர சிகிச்சைக்காகப் போகிறீர்களா?
போகிற உயிரைத் தடுத்தா நிறுத்த முடியும்
பொறுமையாகத்தான் செல்லுங்களேன் ?
என்னது, கல்யாண வீட்டிற்குப் போகிறீர்களா?
நீங்கள் போகா விட்டால் கல்யாணம் நின்று விடவா போகிறது?
ஐயா, துக்கம் விசாரிக்கப் போகிறீர்களா?
செத்தவன், செத்து விட்டான், நீங்கள் போய்த்தான் என்ன ஆகப் போகிறது;
நாங்கள் மட்டும் என்ன வேலை வெட்டி எதுவுமின்றி டிவியில் தெரியவா ஓடுகிறோம்!!
கவிஞர் ஆட்கொண்டேசன்
Want to write for Maniyosai?
| < Prev | Next > |
|---|


