maniyosai.com

You are here: Home இலக்கியம் கவிதை தன்மானத் தமிழச்சியை தள்ளிவைப்போம்!

தன்மானத் தமிழச்சியை தள்ளிவைப்போம்!

E-mail Print
Share/Save/Bookmark

Begging in Tamilnadu

ஏழைகள் இருக்கும் வரை இலவசங்களும் இருக்குமாம்!
ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்று
இவர்கள் சொல்லி வந்ததற்கு இதுதானா அர்ததம்!

ஏழைகளுக்கு இலவசங்களை  கொடுத்தால்
ஏழ்மை அழிந்துவிடுமா என்ன?

ஆடுகள் நனைகிறதே என்று ஓநாய்கள் அழுததாம் !
எல்லாவற்றுக்கும் ஒரு பழமொழியுண்டு எம் மொழியாம்  செம்மொழியிலே!

மக்களுக்கு ஏன் தான் இந்த இலவச மோகமும்; இலவச தாகமும்.!

ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்
என்று கூறினால் விற்பனை இரட்டிப்பு இலவசம்!

தொலைகாட்சி பெட்டிகள் இலவசமென்றால்
வாக்கு பெட்டிகளில் வாக்குகள் இலவசம்!

பொங்கலுக்கு வேட்டி இலவசம், சேலை இலவசம்,
வெல்லம் இலவசம், எல்லாமே இலவசம்!

இனாம் கேட்டு இனிமேல் யாரும் தலை சொறியத் தேவையில்லை!
தேவையறிந்து தானே  தலையில் சொரியும் இலவசங்கள்!

ஏழைகள் இருக்கும் வரை இவர்கள் இலவசங்களை அள்ளிக் கொடுப்பார்களாம்!
ஏழைகள் ஏழைகளாகவே இருக்க வேண்டுமாம்,
இவர்கள் அரச வம்சமாகவே திகழ வேண்டுமாம்!

என்னே சமுதாய அக்கரை! என்னே தாராளம்,என்னே தர்ம சிந்தனை!!

“ஏற்பது இகழ்ச்சி” என்று எழுதிய தன்மானத் தமிழச்சியை தள்ளிவைத்துவிடலாம்!!

-கவிஞர் ஆட்கொண்டேசன்




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

05 January 2012, 20.56 செய்திகள்
கருணாநிதி குடும்பத்திற்கு நிவாரண நிதி : ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை: மின்சாரம் தாக்கில் பலியான திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த...மேலும்...
0 Comments , 115 Hits
29 February 2012, 19.33 செய்திகள்
கூடங்குளம் குறித்த தனது நிலையை தமிழக அரசு தெளிவுப் படுத்த வேண்டும் : கருணாநிதி
சென்னை: கூடங்குளம் அணுமின்நிலையத்துக்கு எதிராக நடந்து வரும்...மேலும்...
0 Comments , 58 Hits
15 May 2012, 20.08 செய்திகள்
ராசாவுக்கு பிணை : கருணாநிதி மகிழ்ச்சி
சென்னை: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்...மேலும்...
0 Comments , 14 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 458 Hits