maniyosai.com

You are here: Home இலக்கியம் கவிதை கவிதை- காப்பியடிக்கப் பட்டக் கவிதை அல்ல இது

கவிதை- காப்பியடிக்கப் பட்டக் கவிதை அல்ல இது

E-mail Print PDF
Share/Save/Bookmark

coffeeகாப்பி யடித்து எழுதப் பட்டக் கவிதையல்ல இது;
காப்பிக்காக எழுதப்பட்டக் கவிதை!

காப்பி காப்பியக்காலத்தில் இருந்ததா? தெரியாது!
காப்பியிக்காலத்தில் இல்லாத வீடு இல்லை; நாடும் இல்லை!

காப்பி எனக்குப் பிடித்தது மட்டுமல்ல;
என்னோடு படித்தது; ’டிகிரி’ காப்பியாயிற்றே!
காலையில் கேட்கும் ராகம் ’பூபாளம்’ என்னும் இசை வாணர்கள்
காலையில் மாலையில் எப்போதும் கேட்கும் ராகம் ‘காப்பி’ என்றால் இசைவார்கள்!

சுட்டெரிக்கும் வெய்யிலிலே துவண்டுவிழும் நாவரசிக்கும்
சுகமளித்து தாகம் தீர்ப்பான் காப்பிச் சக்ரவர்த்தி!
இளநீரும், பழச்சாறும் தோற்பார்கள் சுயம்வரத்தில்!

பில்டர் காப்பியும், இன்ஸ்டண்ட் காப்பியும், கோல்ட் காப்பியும், காப்புசினோ காப்பியும் வேறல்ல;
மஹாவிஷ்ணுவின் அவதாரங்கள் போல், பூசப்பட்ட "அரிதாரங்கள்’’ தான் வேறு!
பிஸினஸ் பேசும் இடத்திலும் காப்பியின் துணை வேண்டும்
பெண் பார்க்கும் படலத்திலும் காப்பியின் கணை வேண்டும்!

ரேடியோவைக் கண்டு பிடித்தவன் மார்க்கோணி
விமானத்தைக் கண்டு பிடித்தவன் ரைட் சகோதரர்கள்,
இந்த காப்பியைக் கண்டு பிடித்த மஹா ரசிகன் யார் சகோதரா?
காலித் தம்ளரை அந்த பக்கம் வைத்து விட்டு பதில் சொல்லு சகோதரா! சொல்லு!!

கவிஞர் ஆட்கொண்டேசன்




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Wednesday, 06 January 2010 16:10 )  

கிட்டதட்ட

13 April 2012, 17.21 தலைப்புச் செய்திகள்
தமிழ் புத்தாண்டை மாற்றுவதா ? - கருணாநிதி மீது ஜெ. பாய்ச்சல்
சென்னை: தன் சுயவிளம்பரத்திற்காக தமிழ் புத்தாண்டை தை முதல் நாளுக்கு...மேலும்...
0 Comments , 107 Hits
05 January 2012, 20.41 தலைப்புச் செய்திகள்
சமஸ்கிருத மொழியை வளர்க்க மத்திய அரசு முயற்சி : பிரதமர் உறுதி
புதுதில்லி: சமஸ்கிருத மொழியை வளர்க்க மத்திய அரசு அனைத்து...மேலும்...
0 Comments , 119 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 458 Hits