maniyosai.com

You are here: Home இலக்கியம் கவிதை கோடானுகோடி வந்தனங்கள்!!

கோடானுகோடி வந்தனங்கள்!!

E-mail Print
Share/Save/Bookmark

population

 

லகின் ஜனத்தொகை எழுநூறு கோடி! - புள்ளி விவரம் கூறுகிறது
உலகில் இதுவரை ஜனனம் எடுத்தோர்  எத்தனை கோடி யாரறிவார்!

காடு மேடுகளைத் திருத்தி கழனிகளை உருவாக்கி
காயும் வயிற்றுக்கு உணவிட்டோர் எத்தனை கோடி!

 

காட்டு மிருகங்களாய் சுற்றித் திரிந்தோரின் அம்மணம் அகற்றி
ஆடை பல தந்தவர் எத்தனை கோடி!

மெய்ஞானத்தோடு, விஞ்ஞானத்தையும் வளர்த்து
மனிதரை மேம்படச் செய்தவர் எத்தனை கோடி!

நோய் நாடி, நோய் முதல் நாடி, அது தணிக்கும் வாய் நாடி
நூறாண்டு வாழ்வு தந்த மருத்துவர் எத்தனை கோடி!

வழிநடத்திச் செல்லும் ஆற்றலைத் தந்து அரசியல் கலையை
உருவாக்கித் தந்தவர் எத்தனை கோடி!

கவலைகள் மறக்க, கலைகளை உணர்த்தி
கலைஞர்களை கண்டெடுத்தோர் எத்தனை கோடி!

மாண்டவர் கோடி, வாழ்ந்தவர் கோடி மக்களின்
மனதில் நிற்பவர் உலகில் எத்தனை கோடி!

கோடியோ, லட்சமோ, ஆயிரமோ எத்தனை பேர்களோ
அத்தனை பேருக்கும் கோடானு கோடி வந்தனங்கள்!

மானுடம் தழைக்கவைத்த மாமனிதர் யாவருக்கும்
ஊனுருகி, உயிருருகி, உயர்கோடி வந்தனங்கள்!

-கவிஞர் ஆட்கொண்டேசன்




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 458 Hits