புதுதில்லி : அத்தியாவசியப் பொருட்களைக் கடத்தினாலோ, பதுக்கினாலோ கடும் தண்டனை அளிக்கப் படும் என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து இன்று (பிப்.6) டில்லயில் அனைத்து மாநில முதல்வர்கள் கூட்டம் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் தொடங்கியது.
இதில், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது மற்றும் பணவீக்கத்தை முறியடிப்பதற்கான செயல்திட்டங்களை உருவாக்குவது குறித்தும் விவாதிக்கப் படுகிறது
பிரதமர் ஆற்றிய துவக்க உரை :
அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசுக்கு மாநில அரசுகள் துணை நிற்க வேண்டும். போதுமான அளவு உணவு தானியங்கள் கையிருப்பில் இருக்கிறது. மாநில அரசுகள் பீதியடைய வேண்டாம்.
சர்வதேச அளவில் அதிகரித்துள்ள விலைவாசி உயர்வும், இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்தியாவசியப் பொருட்களை கடத்துபவர்கள், பதுக்குபவர்கள் மீது கடுமையா சட்டம் பாயும்.
இவ்வாறு பிரதமர் பேசினார்.
Want to write for Maniyosai?


