புதுதில்லி: தீவிரவாத அச்சுறுத்தல்களை முறியடிக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு பாதுகாப்பு குறித்த முதலமைச்சர்கள் மாநாட்டில் மன்மோகன் சிங் பேசியதாவது:
”அண்டை நாடுகளில் இருக்கும் சில பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவுக்குள் நாச வேலைகள் செய்து வருகின்றன. இதனால் ஜம்மு-காஷ்மீர்தான் அதிகம் பாதிக்கப் பட்டுள்ளது.
எல்லை தாண்டிய பயங்கரவாதம், மதக் கலவரத்தை உண்டாக்க திட்டமிடும் சக்திகள் ஆகியவையே உள்நாட்டு பாதுகாப்புக்கு பெரிய அச்சுறுத்தல்களாக விளங்கி வருகின்றன. இவற்றை மத்திய, மாநில அரசுகள் ஒன்று கூடி முறியடிக்க வேண்டும்.
அதே போல், அண்டை நாடுகளில் இருந்து கள்ள நோட்டுகள் அச்சடிக்கப் பட்டு இந்தியாவில் புழக்கத்தில் விடப் படுகிறது. இதையும் தடுக்க வேண்டும்.” இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
| < Prev | Next > |
|---|





’இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே...’ன்னு புரட்சிகவி மட்டுமல்லாம ‘தேன் தேன் தேன்...’னு இன்றைய...
தூக்கம் வராம இருக்கறதுதான் இன்னிக்கு பல பேரோட பிரச்சினையே. ரொம்ப ஓவரா தூங்கி வழியறது ...
அண்மையில் எங்களுக்கு வந்த ஒரு மின்னஞ்சல் எங்களை திடுக்கிட வைத்தது. அந்த பகீர் மெயிலின்...