மும்பை: பாரத்ரத்னா விருது வாங்க ஆசை இருந்தாலும், தற்போது கிரிக்கெட்டில் மட்டுமே முழு கவனம் செலுத்தி வருவதாக கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் குவாலியரில் நடந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 200 ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்தார் சச்சின் தெண்டுல்கர். அதனைத் தொடர்ந்து அவருக்கு பாரத்ரத்னா விருது வழங்க வேண்டும் என கபில் தேவ், வெங்க்ஸர்கார், அஜித் வடேகர் உள்ளிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இன்று (மார்ச் 2) மும்பையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் உரையாடிய சச்சின், “பாரத்ரத்னா விருது வாங்க யாருக்குதான் ஆசை இருக்காது. எனக்கும் ஆசை உண்டு. ஆனால், தற்போதைக்கு எனக்கு கிரிக்கெட் மட்டுமே முக்கியம். விதி படி எது நடக்குமோ, அது நடக்கட்டும்.” என்றார்.
| < Prev | Next > |
|---|








