புதுதில்லி: பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ பொது தேர்வுகள் இன்று (மார்ச் 3) தொடங்கியது.
நாடெங்கும் இருக்கும் 5300 தேர்வு மையங்களில் ஆரம்பித்திருக்கும் இந்த தேர்வுகளில் 6.99 லட்சம் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள்,
இயற்பியல் தேர்வை எழுதினார்கள், 9.02 லட்சம் பத்தாம் வகுப்பு மாணவர்கள் இசை பாடத் தேர்வை எழுதினார்கள்.
கடந்த ஆண்டை விட பத்தாம் வகுப்பு எழுதுபவர்களின் எண்ணிக்கை 8.65 சதவீதம் உயர்ந்துள்ளது. பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் எழுதுபவர்களின் எண்ணிக்கை 8.80 சதவீதமும் உயர்ந்துள்ளது.
இன்று (மார்ச் 3) பன்னிரெண்டாம் வகுப்புக்கு நடந்த இயற்பியல் தேர்வு எளிமையாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
Want to write for Maniyosai?


