புதுடெல்லி: மகளிருக்கு 33% இடஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதாவை வரும் 8ஆம் தேதி மக்களவை, மாநிலங்களவையில் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என பிரதமர் கூறியுள்ளார். பெண்களின் முன்னேற்றத்தில் மத்திய அரசு மிகவும் அக்கறைக் கொண்டுள்ளது. மகளிர் மாநாட்டைத் தொடக்கி வைத்துப் பேசிய அவர், மகளிர் முன்னேற்றத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறது. அரசியல், பொருளாதாரம், சமூகம் ஆகியவற்றில் பெண்களுக்கு உரிய உரிமையளிக்க ஆவண செய்யப்படும் என்றார்.
பஞ்சாயத்துகளில் மகளிருக்கு 33 சதவீத ஒதுக்கீடு அளித்துள்ளதால் நிறைய வியத்தகு மாற்றங்கள் நடந்துள்ளன. அதனால் பஞ்சாயத்துகளில் மகளிர் பங்கை 50 சதவீதமாக உயர்த்தவும் திட்டமிட்டிருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
மகளிருக்கு 33 சதவீத ஒதுக்கீடு என்பது பதிமூன்று வருடக் கனவு. அதை நிறைவேற்ற இனியும் தாமதிக்கக் கூடாது. 33% சதவீத ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்த பின் உள் ஒதுக்கீடு செய்துக் கொள்ளலாம் என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
Want to write for Maniyosai?


