ஜோகன்ஸ்பெர்க்: கோலாகலமாக நடைப்பெற்று வந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் கோப்பையை ஸ்பெயின் அணி வென்றது. மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த இறுதிப் போட்டியில் நெதர்லாந்தை 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அசத்தலாக வீழ்த்தியது.
தென்னாப்பிரிக்காவில் 19வது உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் கோலாகலமாக நடைப்பெற்று வந்தது. இதில் ஜோகன்ஸ்பெர்க் நகரத்தில் உள்ள ‘சாக்கர் சிட்டி’ மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் இதுவரை இரண்டாவது இடத்தில் இருந்து வந்த ஸ்பெயின் அணி வெற்றிப் பெற்றது.
தரவரிசையில் நான்காம் இடத்தில் இருந்த நெதர்லாந்தும் முதலிட ஆசையோடு களத்தில் இறங்கியது. இருப்பினும் ஆட்டம் ஆரம்பித்த 116வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் இனியஸ்டா அடித்த சூப்பர் கோல் உலகக்கோப்பையை சுருட்டியது.
வெற்றிப் பெற்ற ஸ்பெயின் அணிக்கு 142 கோடியும் இரண்டாமிடத்தைப் பிடித்த நெதர்லாந்து அணிக்கு 113 கோடியும் பரிசளிக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பையை ஸ்பெயின் அணிதான் வெல்லும் என கணித்துக் கூறிய ஆக்டோபஸின் வாக்கு பலித்துவிட்டது. உலகக்கோப்பை கால்பந்து முடிவடைந்து விட்டதால் ’மாண்புமிகு’ ஆக்டோபசாரும் தனது பணிக்கு திரும்பிவிட்டார்.
Want to write for Maniyosai?


