maniyosai.com

You are here: Home செய்திகள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதிய உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதிய உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

E-mail Print
Share/Save/Bookmark

congress MP breaking flowerpotsபுதுதில்லி: நாடாளுமன்ற உறுப்பினர்களின் அடிப்படை ஊதியத்தை 3 மடங்கு உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்போது ரூ.16,000 அடிப்படை சம்பளமாக வழங்கப் படுகிறது. இது உயர் மட்ட அரசு அதிகாரிகளின் ஊதியத்தை விட குறைவாக இருப்பதால், ரூ.80,001 ஆக சம்பளத்தை உயர்த்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு பரிந்துரை செய்திருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பள உயர்வு விவகாரத்தில் பல கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தன. இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை 3 மடங்காக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் படி,ரூ.16,000 ஆக இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அடிப்படை ஊதியம், ரூ.50,000 ஆக உயரும்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் அலுவலக செலவுகளுக்கான தொகை இருபது ஆயிரம் ரூபாயில் இருந்து நாற்பது ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப் பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

71.4%
28.6%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 205 Hits