maniyosai.com

You are here: Home செய்திகள் மாவோயிஸ்ட்கள் வெறியாட்டம். 4 போலீசாரில் ஒருவர் கொலை

மாவோயிஸ்ட்கள் வெறியாட்டம். 4 போலீசாரில் ஒருவர் கொலை

E-mail Print
Share/Save/Bookmark

maoistsபாட்னா: பீகாரில் மாவோயிஸ்ட்கள் கடத்தி சென்ற 4 போலிசாரில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பீகார், ஒரிசா, ஜார்கண்ட், சட்டீஸ்கர், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் நக்சலைட்டுகளின் வெறிச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன. மத்திய அரசும் மாவோயிஸ்ட்டுகளும் தாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார் எனக் கூறிக்கொண்டு மற்றவர்களை குறை கூறியவாறே எந்த பேச்சுவார்த்தையும் நடத்தாமல் கண்ணாமூச்சு ஆடி வருகின்றனர். இதில் அடிக்கடி போலிசாருக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் துப்பாக்கி சண்டை நடப்பது வேறு சகஜமாகிவிட்டது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று பீகார் மாநிலம் லக்சாராய் மாவட்டத்தில் வனப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகளை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கும் நக்சல்களுக்கு துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 7 போலிசார் கொல்லப்பட 10 பேர் காயமுற்றனர். இதைத் தொடர்ந்து நக்சல்கள் சிறையில் இருக்கும் 8 நக்சல்களை விடுவிக்க 4 போலிசாரைப் பிணைக் கைதிகளாக பிடித்து சென்றனர்.

அவர்களை விடுவிக்க பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை மாவோயிஸ்ட்டுகளுடன பேச்சுவார்த்தை நடத்துமாறு கடத்தப்பட்ட போலிசாரின் குடும்பத்தினர் வேண்டுக்கோள் விடுத்தனர். பீகாரும் அரசும் மாவோயிஸ்ட்களுடன் பேசி வருகின்றது. ஆனால் நேற்று (01/09/2010) மாலை 4 மணிக்குள் சிறையில் இருக்கும் 8 மாவோயிஸ்ட்டுகளையும் விடுதலை செய்ய வேண்டும் இல்லாவிட்டால் கடத்தி செல்லப்பட்ட போலீசார் கொல்லப்படுவர் என்று மாவோயிஸ்டுகள் விடுத்திருந்த கெடு முடிந்துவிட்ட நிலையில் அபய்யாதவ் எனும் போலீஸ்காரரை சுட்டுக் கொன்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் போலீஸ்தரப்பில் இது உறுதிசெய்யப்படவில்லை.




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

14 December 2011, 20.57 செய்திகள்
இந்தியா - சீனா உறவு : பிரதமர் கருத்து
புதுதில்லி: இந்தியா மீது சீனா தாக்குதல் நடத்தக் கூடும் என்ற கருத்தை...மேலும்...
0 Comments , 144 Hits
27 October 2011, 09.29 தலைப்புச் செய்திகள்
பயண எச்சரிக்கையை திரும்ப பெற ஆஸ்திரேலியாவுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்
புதுதில்லி: தீபாவளி பண்டிகை காலத்தில் இந்தியாவுக்கு செல்வதை...மேலும்...
0 Comments , 95 Hits

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

72.2%
27.8%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 167 Hits