சென்னை:குல்லா அணிந்து அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றுவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.
சென்னையில் தேமுதிக சார்பில் புனித ரமலான் நோன்பு நிகழ்ச்சி நேற்று (செப்.7) நடந்தது. இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது:
"இஸ்லாம் என்பது மதம் கிடையாது; மார்க்கம். ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்று புனித குர்ரான் வலியுறுத்துகிறது. வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கை தானம் செய்ய வேண்டும்.
அரசியல்வாதிகள் குல்லா அணிந்து மக்களை ஏமாற்றுகிறார்கள். நான் அப்படிப்பட்டவன் அல்ல. சிறுபான்மை சமூக மக்களின் நண்பர் என்று கூறுபவர்கள், அவர்களின் முன்னேற்றத்திற்காக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. என்னை வாழ வைத்த மக்களுக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வேன்."
இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
Want to write for Maniyosai?
Download our android app



