maniyosai.com

You are here: Home செய்திகள் ஸ்டாலின் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு

ஸ்டாலின் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு

E-mail Print
Share/Save/Bookmark

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதாக திமுக பொருளாளர் ஸ்டாலின் மீது சென்னை செஷன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா சார்பில் சென்னை நகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன் தாக்கல் செய்த மனுவில், ' டி.ஜி.பி. அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்ததாகவும், சிறுதாவூர், கொடநாடு பங்களா பினாமி பெயரில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அங்கு முதல்வர் ஓய்வுக்காக சென்று தங்கி வருகிறார். இந்த ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவித்துள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் கடந்த டிசம்பர் 2ம் தேதி வெளியான மாலை நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளார்.

சேஷாத்திரிகுமார் என்பவர் ஸ்டாலின் மீது கொடுத்த நில மோசடி புகார் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்தப் புகாருக்கும் முதல்வருக்கும் எந்த தொடர்பும் கிடையாது.

பொய் தகவல் என தெரிந்திருந்தும் முதல்வர் மீது மு.க.ஸ்டாலின் வேண்டும் என்றே அவதூறு பரப்பும் வகையில் பொய்யான புகார்களை தெரிவித்துள்ளார். முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் அவர் அவதூறு பேட்டி கொடுத்துள்ளார். எனவே மு.க.ஸ்டாலினை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

09 January 2012, 18.49 செய்திகள்
பென்னி குக்குக்கு மணிமண்டபம் : வைகோ பாராட்டு
சென்னை: முல்லைபெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் பென்னி...மேலும்...
0 Comments , 131 Hits
23 January 2012, 17.50 தலைப்புச் செய்திகள்
மக்கள்நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: மக்கள்நலப் பணியாளர்களை பணிநீக்கம் செய்து தமிழக அரசு...மேலும்...
0 Comments , 110 Hits
28 March 2012, 11.45 தலைப்புச் செய்திகள்
ஜெயலலிதாவுக்கு கனவில் கூட துரோகம் நினைத்ததில்லை : சசிகலா
சென்னை: ஜெயலலிதாவுக்கு தான் கனவில் கூட துரோகம் நினைத்ததில்லை என...மேலும்...
0 Comments , 81 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 458 Hits