maniyosai.com

You are here: Home செய்திகள் பாகிஸ்தான் டாக்டர் தான் ஒசாமாவின் இருப்பிடத்தைக் காட்டினார் -- அமெரிக்கா தகவல்

பாகிஸ்தான் டாக்டர் தான் ஒசாமாவின் இருப்பிடத்தைக் காட்டினார் -- அமெரிக்கா தகவல்

E-mail Print
Share/Save/Bookmark

US defence Secy. Panettaவாஷிங்டன்: கடந்த மே மாதம் தீவிரவாதி ஒசாமா பின் லேடனை கண்டுபிடித்து அழித்தது அமெரிக்கா. அப்போது ஒசாமா பதுங்கியிருந்த வீட்டை அமெரிக்காவிற்கு காட்டிக்கொடுத்தது பாகிஸ்தானை சேர்ந்த ஒரு டாக்டர்தான் என்று அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலர் லியோன் பனட்டா வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். சிபிஎஸ் 60 நிமிடங்கள் (CBS's 60 Minutes) என்னும் செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில் அமெரிக்க பாதுகாப்பு செயலர் பானட்டா பாக். டாக்டர் ஷகில் அஃப்ரிடி என்பவர்தான் தீவிரவாதி பின் லேடன் பாகிஸ்தானில் அபட்டாபாடில் தங்கியிருந்த   தகவலை கொடுத்தார் என்று கூறியுள்ளார். இந்த நேர்காணல் நாளை (ஜன-29) சிபிஎஸ் 60 நிமிடம் நிகழ்ச்சியில் ஒலிபரப்பப்படவுள்ளது.

அமெரிக்க உளவுத்துறையான CIA சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தடுப்பூசி திட்டம் தொடர்பாக மரபணு மாதிரி திரட்டும் பணியில் அமர்த்தப்பட்டிருந்த டாக்டர் அஃப்ரிடிதான் ஒசாமா பின் லேடனின் இருப்பிடத்தை உறுதி செய்தார். அவர் பாக் அரசால் தேச துரோக குற்றம் சாட்ட்ப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த டாக்டரை குறித்து மிகவும் கவலையுற்றிருப்பதாக பனட்டா கூறினார்.

60 நிமிட நேர்காணலில் மேலும் பனட்டா கூறுகையில் பாகிஸ்தான் அரசில் பணிபுரிந்த யாரோ ஒருவருக்கு பின் லேடன் அந்த குறிப்பிட்ட காம்பவுண்டின் உள்ளே பதுங்கி இருந்ததை உணர்ந்துகொள்ளும் அறிவு இருந்திருக்கிறது என்றார். ஆனால் பாகிஸ்தான் அரசு பின் லேடன் பாகிஸ்தானில் பதுங்கியிருந்ததை முன்னதாகவே தெரிந்துதான் வைத்திருந்ததா என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்று பன்பட்டா மேலும் கூறினார்.

பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பரபரப்பு அடங்கும் வரை ஷகில் அஃப்ரிடி விஷயத்தை அடக்கிவைத்திருந்துவிட்டு, பின்னர் அவரை அமெரிக்காவின் வசம் ஒப்படைக்கலாம் என்று பாகிஸ்தான் திட்டமிட்டிருததாக பனட்டா குறிப்பிட்டார். இத் தகவலை வெளியிட்ட இரண்டு பாக் அதிகாரிகள் தங்கள் பெயரை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாகவும் அவர் கூறினார். ஏனென்றால் அஃப்ரிடி மீதான தேசதுரோக வழக்கு பாக் அரசின் நிலுவையில் உள்ளதால் அந்த அதிகாரிகள் தங்களை அடையாளம் காட்டிக்கொள்ள விரும்பவில்லையாம்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

11 March 2012, 18.32 சம்பவம்
பாக்கிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல் : 13 பேர் பலி
இஸ்லமாபாத்: பாக்கிஸ்தான் நாட்டின் பெஷாவார் நகரில் இன்று (மார்ச் 11)...மேலும்...
0 Comments , 123 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 458 Hits