maniyosai.com

You are here: Home செய்திகள் ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு: அதிமுகவினர் மனு

ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு: அதிமுகவினர் மனு

E-mail Print
Share/Save/Bookmark

admk logoசென்னை: மதுரையில் பொது கூட்டம் நடத்தவிருக்கும் அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதாவுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கக் கோரி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழக அரசின் தலைமை செயலாளர் மற்றும் உள்துறை செயலாளரிடம் மனு கொடுத்துள்ளனர்.

கடந்த வாரம், அதிமுகவின் கட்சி தொலைக்காட்சியான ஜெயா டிவியின் ஈக்காடுதாங்கல் அலுவலகத்துக்கு கடிதம் ஒன்று வந்தது. மதுரை மாவட்டம் கள்ளந்திரி பகுதியில் இருந்து அறிவொளி என்ற பெயரில் வந்திருந்த அந்த கடிதத்தில்,  ’அண்ணனை’ பகைத்துக் கொண்டு ஜெயலலிதா மதுரைக்கு வந்தால், குண்டு வீசி கொல்லப் படுவார் என்றும் அதை நேரடியாக ஒளிப்பரப்ப ஜெயா டிவியும் மதுரை வர வேண்டும் எனவும்  குறிப்பிடப் பட்டிருந்தது. இதையடுத்து ஜெயா டிவி. சார்பில் அதன் பொது மேலாளர் ரங்கராஜன், டிஜிபி மற்றும் சென்னை போலீஸ் கமிஷனரிடம் கடந்த வாரம் புகார் கொடுத்திருந்தார்.

இந்நிலையில், அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஓ.பன்னீர் செல்வம் , கே.ஏ. செங்கோட்டையன், பி.கே. சேகர்பாபு, செந்தமிழ் செல்வன் ஆகியோர் தலைமை செயலாளர் மற்றும் உள்துறை செயலாளரிடம் இன்று (ஆக.30) மனு கொடுத்தனர்.

அப்போது நிருபர்களிடம் செங்கோட்டையன் கூரியதாவது:

மதுரையில் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். அதில் ஜெயலலிதா கலந்து கொள்ளக்கூடாது என கொலை மிரட்டல் விடுவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி போலீஸ் டி.ஜி.பி.யிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ஜெயலலிதாவுக்கு உச்சச்கட்ட பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று தலைமை செயலாளர் ஸ்ரீபதி, உள்துறை செயலாளர் ஞானதேசிகனை சந்தித்து மனு கொடுத்துள்ளோம்.

இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்தார்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

18 March 2012, 18.04 தலைப்புச் செய்திகள்
சங்கரன்கோவிலில் விறுவிறு வாக்குப்பதிவு
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்...மேலும்...
0 Comments , 49 Hits
20 January 2012, 20.13 தலைப்புச் செய்திகள்
நாகை துறைமுக மேம்பாட்டிற்கு ரூ.380 கோடி நிதி : ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை: நாகப்பட்டினம் துறைமுகத்தின் மேம்பாட்டிற்கு ரூ.380 கோடி நிதி...மேலும்...
0 Comments , 116 Hits
03 April 2012, 12.53 தலைப்புச் செய்திகள்
தமிழகத்தில் வீடுகளுக்கான மின் கட்டணம் குறைப்பு
சென்னை: தமிழகத்தில் அண்மையில் உயர்த்தப் பட்ட வீடுகளுக்கான மின்...மேலும்...
0 Comments , 102 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 458 Hits