சென்னை: அதிமுகவினர் விழிப்போடு களப்பணியாற்றி கட்சியின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
சென்னையில் 20 அதிமுக பிரமுகர்களின் இல்லத் திருமணங்களுக்கு ஜெயலலிதா தலைமையேற்று உரையாற்றினார்.
திருமண விழாவில் அவர் மேலும் பேசியதாவது:
இந்த மணவிழாவில் அதிமுகவினருக்கு ஒரு முக்கிய செய்தியை தெரிவிக்க விரும்புகிறேன். வெற்றிகளைக் குவிக்கும் நேரம் இந்த விநாடி முதல் தொடங்கி விட்டது. விஞ்ஞானிகளின் பாணியில் சொல்வதென்றால் கவுன்ட் டவுன் ஆரம்பித்துவிட்டது. புரட்சித் தலைவரால் தீய சக்தி என வர்ணிக்கப் பட்ட கருணாநிதி, பணத்தால் நம் வெற்றியைத் தடுக்க முயற்சிக்கலாம். நாம் விழிப்போடு இருக்க வேண்டும்.
ஒருவன் சொர்க்கத்தின் வாசலில் ஆயிரம் வருடம் தவமிருந்தானாம். ஒரே ஒரு நிமிடம் அயர்ந்து கண்ணை மூடி திறந்திருக்கிறான். அந்த இடைவெளியில் சொர்க்க வாசல் கதவு திறந்து மூடிக் கொண்டுவிட்டதாம். எனவே, இந்த விநாடி தொடங்கி அயராமல் விழிப்போடு களப்பணியாற்ற அதிமுகவினர் ஆயத்தமாகிவிட வேண்டும்.
இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.
Want to write for Maniyosai?
Download our android app





