maniyosai.com

You are here: Home செய்திகள் பேருந்து நிலையம் இடம் மாற்றம்: தூத்துக்குடியில் அதிமுக ஆர்ப்பாட்டம்

பேருந்து நிலையம் இடம் மாற்றம்: தூத்துக்குடியில் அதிமுக ஆர்ப்பாட்டம்

E-mail Print
Share/Save/Bookmark

Jayalalithaசென்னை: பேருந்து நிலையம் இடம் மாற்றப் பட்டதைக் கண்டித்து தூத்துக்குடியில் நாளை (ஜூலை 3) அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று (ஜூலை 2) அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தூத்துக்குடிக்கு தெற்கே செல்லும் பேருந்துகள் பாளையங்கோட்டை சாலையில் அமைந்துள்ள பழைய பேருந்து நிலையத்தில் இருந்தும், தூத்துக்குடிக்கு வடக்கே செல்லும் பேருந்துகள் எட்டையபுரம் சாலையில் அமைந்துள்ள புதிய பேருந்து நிலையத்தில் இருந்தும் கடந்த 17 ஆண்டு காலமாக இயங்கி வந்தன. தூத்துக்குடி திமுக மாவட்டச் செயலாளர் மற்றும் அவரது உறவினர்களுக்கு புதிய பேருந்து நிலையம் அருகில் வணிக வளாகம், நட்சத்திர அந்தஸ்து உள்ள உணவகம், வீடுகள், நிலபுலங்கள் இருக்கின்றன.

அனைத்துப் பேருந்துகளும் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயங்கினால், தன் சொத்துக்களின் மதிப்பு அதிகரிக்கும் என்ற எண்ணத்தில், பழைய பேருந்து நிலையத்தை மூட நினைத்தவர் திமுக மாவட்டச் செயலாளர் பெரியசாமி. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றமும், தூத்துக்குடிக்கு தெற்கே செல்லும் பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்தில் இருந்தும், தூத்துக்குடிக்கு வடக்கே செல்லும் பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்தில் இருந்தும் இயங்க உத்தரவிட்டது. உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி கடந்த 17 ஆண்டுகளாக எந்தவிதப் பிரச்சனையும் இன்றி பேருந்துகள் இயங்கி வந்தன.

இந்நிலையில், மக்களின் எதிர்ப்பையும் மீறி, போக்குவரத்துக் குழுவின் முடிவிற்கிணங்க அனைத்துப் பேருந்துகளும் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து செயல்படும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் தற்போது கூறியிருக்கிறார்.

தூத்துக்குடிக்கு தெற்கே செல்லும் பேருந்துகளை பழைய பேருந்து நிலையத்திலிருந்து தொடர்ந்து இயக்க வலியுறுத்தி அதிமுக தூத்துக்குடி மாவட்டக் கழகத்தின் சார்பில், நாளை (ஜூலை 3)தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் கழக மீனவர் பிரிவு இணைச் செயலாளர் ஜெனிபர் சந்திரன் தலைமையிலும், தூத்துக்குடி மாவட்டக் கழகச் செயலாளர் பள்ளத்தூர் டி.முருகேசன் மற்றும் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி கழகச் செயலாளர் வி.பி.ஆர். ரமேஷ் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

 




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

31 March 2012, 18.32 செய்திகள்
கூடங்குளம் மின்சாரம் முழுவதும் தமிழகத்துக்கே வேண்டும் : பிரதமருக்கு ஜெ. கடிதம்
சென்னை: கூடங்குளம் அணுமின்நிலையத்தில் உற்பத்தி செய்யப் படும்...மேலும்...
0 Comments , 93 Hits
28 February 2012, 18.24 தலைப்புச் செய்திகள்
தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த ஜெயலலிதா உறுதி : அமெரிக்க அமைப்பு பாராட்டு
சென்னை: தமிழ்நாட்டில் மிகச் சிறந்த மாற்றத்தை கொண்டு வர முதல்வர்...மேலும்...
0 Comments , 74 Hits
24 December 2011, 21.20 செய்திகள்
உலகெங்கும் சகோதரத்துவம் தழைக்க வேண்டும்: ஜெயலலிதா கிறிஸ்துமஸ் வாழ்த்து
சென்னை: உலகம் எங்கும் அன்பு தவழ்ந்து, அமைதி நிலவி, சத்தியம் நிலைத்து,...மேலும்...
0 Comments , 217 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 458 Hits