சென்னை: நடிகர் ரஜினிகாந்த்துக்கு இரண்டாவது பேரப் பிள்ளை பிறந்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவருக்கும் நடிகர் தனுஷுக்கும் 2004ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு முன் முதல் ஆண் குழந்தை பிறந்தது.
தாத்தா ரஜினிக்கு அடிக்கடி இமயமலை செல்லும் பழக்கம் இருப்பதால், குழந்தைக்கு யாத்ரா என பெயர் சூட்டப் பட்டது.
இந்நிலையில், ஐஸ்வர்யா தனுஷ் தம்பதிக்கு இன்று காலை இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் இருக்கும் தனுஷ் தன் நெருங்கிய நண்பர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
Want to write for Maniyosai?
Download our android app





