புதுதில்லி: மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு இன்று (ஆகஸ்டு 5) நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார். அவர் அமைச்சர் ஆகி ஓராண்டுக்கு பிறகு முதல் தடவையாக கேள்விக்கான பதிலை அழகிரி அளித்துள்ளார்.
மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் சரண் தாஸ் மஹந்த் கேட்ட கேள்வி ஒன்றுக்கு,’A முதல் E வரையிலான அறிக்கை அவையில் தாக்கல் செய்யப் பட்டுள்ளது’ என அழகிரி தன் வரலாற்று முக்கியத்துவம் (!!) வாய்ந்த பதிலை அளித்தார், அதுவும் ஆங்கிலத்தில்!
இதற்கு பதிலளித்த சரண் தாஸ் மஹந்த், “என் கேள்வியை நாளின் முதல் கேள்வியாக எடுத்துக் கொண்டு பதிலளித்ததற்கு மகிழ்ச்சி. அதுவும் அமைச்சர் நாடாளுமன்றத்தில் அளிக்கும் முதல் பதில் என்பதை நினைத்து எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.” என்றார்.
பின்னர் கேட்கப் பட்ட துணை கேள்விகளுக்கு, அழகிரியின் அனுமதியை பெற்று இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜேனா பதிலளித்தார்.
Want to write for Maniyosai?
Download our android app





