பெங்களூரு: சிவசேனாவின் 'மும்பை மராத்தியர்களுக்கே' கொள்கையில் பாஜகவுக்கு உடன்பாடு இல்லையென்றாலும் அக்கட்சியுடனான கூட்டணியில் மாற்றம் இருக்காது என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
இது குறித்து பெங்களூருவில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
“இது குறித்து (மும்பை மராத்தியர்களுக்கே குறித்து) பாஜகவின் நிலைபாட்டை, எங்கள் தலைவர் நிதின் கட்காரி ஏற்கனவே தெளிவு படுத்தியுள்ளார். ஜாதி, மதம், இனம் ஆகிய வேறுபாடுகளை கடந்து இந்தியா என்பது ஒரே நாடு என்பதுதான் பாஜகவின் கொள்கை.
இந்தியர்களுக்கு, இந்தியாவில் எங்கு வேண்டுமென்றாலும், சென்று தங்க உரிமை உண்டு. அரசியலில் இரு வேறு கட்சிகளுக்கு, இரு வேறு கொள்கை இருப்பது சகஜம். அதனால், சிவசேனாவுடன் கூட்டணி முறித்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.”
இவ்வாறு வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
Want to write for Maniyosai?
Download our android app



