சென்னை: முன்னாள் எம்.எல்.ஏ டபிள்யூ.ஆர். வரதராஜன் மரணம் குறித்து மக்கள் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பிய செய்தி சர்ச்சைக்குள்ளானதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மக்கள் தொலைக்காட்சி அலுவலகத்தில் இன்று காலை (மார்ச் 5) தாக்குதல் நடத்தினர்.
சில தினங்களுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ டபிள்யூ.ஆர். வரதராஜன் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலையில் மர்மம் இருப்பதாகவும், அவர் கொலை செய்யப் பட்டிருக்கலாம் எனவும் மக்கள் தொலைக்காட்சி செய்தி ஒளிப்பரப்பியது.
இந்த செய்தியால் வெகுண்டெழுந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மக்கள் தொலைக்காட்சி மீது இன்று காலை (மார்ச் 5) தாக்குதலில் ஈடுப்பட்டனர். அலுவலகத்தில் உள்ள கண்ணாடிக் கதவுகளை உடைத்து, கம்ப்யூட்டர்களை அடித்து நொறுக்குவது என நாச வேலைகளில் ஈடுப்பட்டனர். இதனால் அங்கு பணிப்புரியும் பெண் ஊழியர்கள் உட்பட சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து திநகரில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை பாட்டாளி மக்கள் கட்சியினர் தாக்கி பதிலடிக் கொடுத்துள்ளனர்.
Want to write for Maniyosai?
Download our android app




