மும்பை: பொதுத்துறை வங்கி சேவைகளை விரிவுபடுத்துதல், தனியார் வங்கிகளில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (07/09/2010) அனைத்து வங்கி ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுப்பட உள்ளதால் வங்கி சேவைகள் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வேலைநிறுத்தம் அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம்(ஏ.ஐ.பி.இ.ஏ.,) சார்பாக நடத்தப்படுகிறது. இதில்பொதுத்துறை வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் வெளிநாட்டு வங்கிகள், அடங்கிய அனைத்து வங்கிகளைச் சேர்ந்த 10 லட்சம் ஊழியர்கள் பங்கேற்கின்றனர்.
கடைசியாக கிடைத்த தகவலின்படி ஸ்டேட் வங்கியும் இந்த ஸ்டிரைக்கில் கலந்துக் கொள்வதாக அறிவித்துள்ளது.
அனைத்து வங்கிகளும் பங்கேற்பதால் நாளை வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Want to write for Maniyosai?
Download our android app



