பாட்நா: பிகார் கோசியில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு நிவாரணமாக குஜராத் அரசு அளித்த 5 கோடி ரூபாய் நிவாரண நிதியை, பிகார் முதல்வர் நிதிஷ் குமார் திருப்பிக் கொடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரம் பாஜக கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிகார் வந்திருந்தார். அப்பொழுது, குஜராத் அரசு சார்பாக, பிகார் நாளிதழ்களில் முழு பக்க விளம்பரங்கள் இடம் பெற்றிருந்தன.
அதில், பிகார் மாநிலம், கோசி வெள்ள நிவாரண நிதியாக, குஜராத் அரசு 5 கோடி ரூபாய் அளித்தது குறிப்பிடப் பட்டிருந்தது.இந்த விளம்பரம், நிதிஷ் குமாருக்கு பயங்கர ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
‘ஒருவருக்கு செய்த உதவியை சுட்டிக் காட்டுவது அநாகரிகம்.’ என குஜராத் அரசின் செயலை அறிக்கை மூலம் கண்டித்திருந்தார் நிதிஷ் குமார்.
இந்நிலையில், குஜராத் அரசு அளித்திருந்த 5 கோடி ரூபாய் நிவாரண நிதியை, பிகார் அரசு திருப்பிக் கொடுத்து விட்டதாக பிகார் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Want to write for Maniyosai?
Download our android app




