maniyosai.com

You are here: Home செய்திகள் ஏழைகள் மீது இல்லாத அக்கறை எண்ணெய் நிறுவனங்கள் மீது இருப்பது ஏன்? - பிரதமருக்கு பாஜக கேள்வி

ஏழைகள் மீது இல்லாத அக்கறை எண்ணெய் நிறுவனங்கள் மீது இருப்பது ஏன்? - பிரதமருக்கு பாஜக கேள்வி

E-mail Print
Share/Save/Bookmark

bjpபுதுதில்லி: ஏழை மக்கள் மீது இல்லாத அக்கறை எண்ணெய் நிறுவனங்கல் மீது இருப்பது ஏன் என பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

எரிவாயு பொருட்களின் விலையை மத்திய அரசு அண்மையில் ஏற்றியது. மத்திய அரசின் இந்த மக்கள் விரோத செயலை கண்டித்து ஜூலை 5ம் தேதி எதிர்கட்சிகள் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த பாரத் பந்த் குறித்து செய்தியாளர்களிடம் பாஜக தலைவர் நேற்று (ஜூலை 2) பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “மன்மோகன் சிங் ஒரு மிகப் பெரிய பொருளாதார மேதையாக இருந்தும் அவரால் விலைவாசியை கட்டுப்படுத்த முடியவில்லை. உற்பத்தி அதிகரித்து இருப்பதாகவும், விலைவாசியை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்திருப்பதாகவும் மத்திய அரசு கூறிக் கொள்கிறது. அப்படி இருந்தும் உணவு பொருட்களின் விலை ஏன் தாறுமாறாக அதிகரித்து வருகிறது என பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும்.விலைவாசி உயர்வைப் பற்றி சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் எதையும் பேசாமல் மெளனம் சாதிப்பது ஏன்?

ஐமுகூ அரசில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. நாட்டில் எவ்வளவு ஏழைகள் இருக்கின்றனர் என்பதற்கான புள்ளிவிவரமே மத்திய அரசிடம் இல்லை. இயற்கை எரிவாயுவை மத்திய அரசு பிரபலப் படுத்த வேண்டும். இதை ஏன் மத்திய அரசு செய்ய மாட்டேன் என்கிறது?

உணவு தானியங்களை சேமிக்க சரியான கிடங்கு வசதி இல்லாததால் 1800 கோடி ரூபாய் மதிப்புள்ள உணவு தானியங்கள் வீணாகியுள்ளன.

பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப் பட்டிருப்பதற்கு எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டு வரும் நஷ்டமே காரணம் என பிரதமர் சொல்கிறார். எண்ணெய் நிறுவனங்களின் நலன் முக்கியமா, ஏழைகளின் நலன் முக்கியமா என மன்மோகன் சிங் விளக்க வேண்டும்.”

இவ்வாறு நிதின் கத்காரி கூறியுள்ளார்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

05 January 2012, 20.41 தலைப்புச் செய்திகள்
சமஸ்கிருத மொழியை வளர்க்க மத்திய அரசு முயற்சி : பிரதமர் உறுதி
புதுதில்லி: சமஸ்கிருத மொழியை வளர்க்க மத்திய அரசு அனைத்து...மேலும்...
0 Comments , 119 Hits
13 March 2012, 18.32 தலைப்புச் செய்திகள்
இலங்கை தமிழர் விவகாரம் : கருணாநிதிக்கு பிரதமர் கடிதம்
புதுதில்லி: இலங்கை அரசுக்கு எதிராக ஐநா மனித உரிமை குழுவில் தாக்கல்...மேலும்...
0 Comments , 44 Hits
14 February 2012, 19.19 செய்திகள்
கர்நாடக அமைச்சர் ஆச்சாரியா மறைவு
பெங்களூரு: கர்நாடக அமைச்சர் வி.எஸ்.ஆச்சாரியா மாரடைப்பால் இன்று...மேலும்...
0 Comments , 105 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 458 Hits