புதுதில்லி: இணையதளத்தின் மூலம் ரயில் பயணச் சீட்டு வாங்கும் போதே, உணவையும் சேர்த்து முன்பதிவு செய்யும் திட்டத்தை ரயில்வே துறை அறிமுகப் படுத்த உள்ளது.
ரயில்வே கவுண்டர்களில் பயணச்சீட்டு வாங்குபவர்களை விட ரயில்வே இணையதளம் மூலம் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு ஆன்லைனின் பயணச்சீட்டு பதிவு செய்யும் பயணகளின் வசதிக்காக ஒரு புதிய திட்டத்தை அறிமுகப் படுத்த உள்ளது இந்திய ரயில்வே துறை.
அதன் படி, இணையதளத்தின் மூலம் பயணச்சீட்டு வாங்கும் போதே, பயணத்தின் போது தங்களுக்கு வேண்டிய உணவையும் முன்பதிவு செய்துக் கொள்ளலாம். ஆனால், இதற்கான கட்டணத்தை ஆன்லைனில் ரயில்வே துறை பெற்றுக் கொள்ளாது. பயணத்தின் போது உணவு வழங்கப் படும் போது பணம் பெற்றுக் கொள்ளப் படும் என ரயில்வே வட்டாரங்கள் கூறியுள்ளன.
இந்த சேவை இணையதளத்தின் மூலம் பயணச்சீட்டு வாங்குபவர்களுக்கு மட்டுமே உண்டு என்பது குறிப்பிடத் தக்கது.
Want to write for Maniyosai?
Download our android app




