பெங்களூர்: பி டி கத்திரிக்காய் பற்றியப் பொதுக்கூட்டத்தில் சுற்றுச்சூழல் அமைச்சர் தனதுப் பொறுமையை இழந்து ஆவேசமானார். அவர் மான்சேண்டோ கம்பெனியின் ஏஜெண்ட் என்று எழுந்த குற்றச்சாட்டினால் மிகவும் கோபப்பட்ட அவர் போய் மனநல மருத்துவரை சந்திக்க சொல்லி தன்னை எதிர்த்தவர் மீது ஆத்திரப்பட்டார்.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்திரிக்காய் குறித்த ஒரு கூட்டம் இன்று (06/02/2010) பெங்களூரில் நடந்தது. இதில் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கலந்துக் கொண்டுப் பேசினார். அப்பொழுது பி டி கத்திரிக்காயை எதிர்க்கும் ஒருவர் அவரை மான்சேண்டோ கம்பெனியின் ஏஜெண்ட் எனக் குறிப்பிட ஜெய்ராம் ரமேஷ் தனது நிதானத்தை இழந்தார்.
‘நான் ஒன்றும் மான்சேண்டோ கம்பெனியின் ஏஜெண்ட் அல்ல. இப்படி குற்றம்சாட்டும் நீங்கள் ஒரு மனநல மருத்துவரை சந்தித்து சிகிச்சைப் பெற்றுக் கொள்ளுங்கள். இதுப் போல மேலும் குறுக்கிட்டால் இந்தக் கூட்டத்திலிருந்து உங்களை வெளியேற்ற நேரிடும் என்று ஆவேசப்பட்டார். விவசாயிகள், மருத்துவர்கள், அறிவியலாளர்கள் நிறைந்திருந்த அரங்கில் அமைச்சர் தன்னை எதிர்த்தவர்களை நோக்கி, ‘உங்கள் பேச்சை என்னால் கேட்க முடியாது’ என்றுக் கூச்சலிட்டார். மூன்றரை மணி நேரம் நடந்த கருத்தரங்கம் முழுவதும் இதுப்போலவே நடந்து முடிந்தது.
Want to write for Maniyosai?
Download our android app



