maniyosai.com

You are here: Home செய்திகள் வணிக செய்திகள் தங்கத்திற்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம் : மத்திய அரசு கிடுக்கிப்பிடி

தங்கத்திற்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம் : மத்திய அரசு கிடுக்கிப்பிடி

Share/Save/Bookmark

goldபுதுதில்லி: தங்கத்திற்கு ஹால்மார்க் தர முத்திரையை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை இன்று (ஜன.4) வழங்கியது.

தற்போது தங்கம், சிமெண்ட், மினரல் குடிதண்ணீர், பால் பொருட்கள் உள்ளிட்ட 77 பொருட்களுக்கு மத்திய அரசின் நுகர்வோர் நல அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் இந்திய தர நிர்ணய வாரியம் (பி.ஐ.எஸ்.) ஹாம்மார்க் தர முத்திரையை வழங்கி வருகிறது.

இது வரை, இந்த ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப் படவில்லை. இதனால் நுகர்வோர் நலன் பாதிக்கப் படுவதாக பரவலான குறை நிலவியது.

இந்நிலையில், ஹால்மார்க் தர முத்திரையை தங்கம், சிமெண்ட் உள்ளிட்ட பொருட்களுக்கு கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்புதல், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று (ஜன.4) நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் வழங்கப் பட்டது.

மேலும், தகவல்தொழில்நுட்பத் துறை, உயிரித் தொழில்நுட்பத் துறை ஆகிய வளர்ந்து வரும் துறைகளுக்கும் தர நிர்ணயம் செய்யவும் மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹால்மார்க் முத்திரை பெறாத பொருட்களை தயாரிப்போருக்கு கடுமையான தண்டனை வழங்குவது குறித்தும் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%