maniyosai.com

You are here: Home செய்திகள் மாணவர்களை அடித்தால் சிறை தண்டனை: மத்திய அரசு அதிரடி

மாணவர்களை அடித்தால் சிறை தண்டனை: மத்திய அரசு அதிரடி

E-mail Print
Share/Save/Bookmark

corporal punishmentபுதுதில்லி: பள்ளிகளில் மாணவர்களை சரமாரியாக தாக்கும் ஆசிரியர்களுக்கு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் ஆசிரியர்களால் தாக்கப் படுவது அதிகரித்து விட்டது. மாணவர்களுக்கு ஒழுக்கம் வருவதற்காக, லேசாக அடித்தால் கூட பரவாயில்லை. பல சமயங்களில்,மாணவர்களுக்கு, நிரந்தர உடல் ஊனமோ, மன பாதிப்போ ஏற்படும் அளவு ஆசிரியர்கள் தாக்குகின்றனர். இதனால், மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதும் அதிகரித்து விட்டது.
இதனை தடுக்க மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் புது வழிமுறைகளை அறிமுகப் படுத்தியுள்ளது. இதன் படி, மாணவர்களை ஆசிரியர்கள் அடிப்பதற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்த தடையை முதல் தடவை மீறினால், ஓராண்டு சிறை தண்டனையோ, ரூ.50,000 அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப் படும். மீண்டும் தடையை மீறினால், 3 ஆண்டுகள் சிறையில் அடைக்கப் படுவார்கள். கூடுதலாக ரூ.25,000 அபராதம் விதிக்கப் படும்.

ஒவ்வொரு பள்ளிக்கூடங்களிலும், குழந்தைகள் உரிமை குழு அமைக்கப் படும். தாங்கள் தாக்கப் பட்டால், மாணவர்களே இங்கு புகார் அளிக்கலாம்.

இது தவிர, குழந்தைகளுக்கான எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் சில மாற்றங்களை செய்யவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன் படி, குழந்தைகளை க்கினாலோ, பாலியல் தொந்தரவுகள் செய்தாலோ, தகாத சொற்களால் திட்டினாலோ, பெற்றோர், உறவினர், அக்கம்பக்கத்தினர் என யாராக இருந்தாலும் தண்டனை கிடைக்கும்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

04 January 2012, 18.29 தலைப்புச் செய்திகள்
இடஒதுக்கீடு : மத்திய அரசு திடீர் முடிவு
புதுதில்லி: மத்திய அரசு பணிகளில் நிரப்பப் படாமல் இருக்கும்...மேலும்...
0 Comments , 126 Hits
08 May 2012, 18.03 தலைப்புச் செய்திகள்
ஹஜ் பயணத்திற்கு மானியம் : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
புதுதில்லி: சிறுபான்மையினர் வாக்கு வங்கியை கருத்தில் கொண்டு மத்திய...மேலும்...
0 Comments , 81 Hits
19 March 2012, 21.21 செய்திகள்
மத்திய ஆளும் கூட்டணியில் சமாஜ்வாதி ? - முலாயம் மறுப்பு
லக்னோ: மத்தியில் ஆளும் ஐ.மு.கூட்டணியில் சமாஜ்வாதி கட்சி சேராது என்று...மேலும்...
0 Comments , 62 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 458 Hits