மும்பை: நடிகர் பிரகாஷ்ராஜ் - போனி வர்மா திருமணம் இன்று (ஆக.24) மும்பையில் நடந்தது.
டூயட் படத்தின் மூலம் தமிழில் கே.பாலசந்தரால் அறிமுகம் செய்யப் பட்டவர் பிரகாஷ்ராஜ். தன் நடிப்பு திறமை மூலமாக குறுகிய காலத்திலேயே புகழின் உச்சிக்கு சென்றார் பிரகாஷ் ராஜ்.
பிரகாஷ்ராஜ், நடிகை டிஸ்கோ சாந்தியின் சகோதரி லலிதாகுமாரியை திருமணம் செய்து கொண்டு பல ஆண்டுகள் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில், அவர்கள் சமீபத்தில் விவகாரத்து செய்தனர். விவாகரத்துக்கான காரணத்தை பிரகாஷ்ராஜ் ஊடகங்களுக்கு தெரிவிக்கவில்லை.
இதற்கிடையே, நடன இயக்குனர் போனி வர்மாவை பிரகாஷ் ராஜ் திருமணம் செய்து கொள்ள போவதாக பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டன. இது பற்றி பிரகாஷ்ராஜ் எதையும் பேசாமல் மெளனம் சாதித்து வந்தார். அண்மையில் நடந்த ‘இனிது இனிது’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பிரகாஷ் ராஜூடன் போனி வர்மாவும் கலந்துக் கொண்டார். அவரை தன் தோழி என நிருபர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார் பிரகாஷ் ராஜ். அவர்கள் திருமணம் பற்றி நிருபர்கள் கேட்டதற்கு பதிலளிக்காமல் நழுவி விட்டார் பிரகாஷ்ராஜ்.
இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜூக்கும், போனி வர்மாவுக்கும் மும்பையில் இன்று காலை (ஆக.24) 10.30 மணிக்கு திடீர் திருமணம் நடந்தது. இந்து முறைப்படி நடந்த இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மற்றும் முக்கிய திரையுலக பிரமுகர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
Want to write for Maniyosai?






