சென்னை: பழைய அணை உடைந்து ஆயிரக்கணக்கானோர் இறக்க காரணமாக இருப்பது போன்ற கதையமைப்பு கொண்ட டேம் 999 திரைப்படத்தை தமிழகத்தில் திரையிடுவதில்லை என தமிழக திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையை அடிப்படையாகக் கொண்டு, டேம் 999 என்ற பெயரில் ஆங்கில திரைப்படம் தயாரிக்கப் பட்டுள்ளது. பழமையான அணை உடைந்து ஊருக்குள் வெள்ளநீர் புகுந்து ஆயிரக் கணக்கானோர் மடிவதைப் போல இந்தப் படத்தில் காட்சிகள் அமைந்துள்ளன.
அணை விவகாரத்தில் தமிழகத்திற்கும், கேரளத்திற்கும் ஏற்கனவே வாய்க்கால் தகராறு இருப்பதால், இந்த திரைப்படத்திற்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தப் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என திமுக, மதிமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இதற்கிடையே சர்ச்சைக்குரிய டேம் 999 படத்தை தமிழகத்தில் திரையிடுவதில்லை என தமிழக திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது. பல்வேறு கட்சியினரின் எதிர்ப்பு காரணமாக இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
Want to write for Maniyosai?
Download our android app




