கோலிவுட்: நடிகர் சிம்பு தன் பெயரை மாற்றிக் கொண்டுள்ளதாக தெரிகிறது.
பிரபல இயக்குனர் மற்றும் நடிகரான டி.ராஜேந்தரின் மகன் சிலம்பரசன். இவர் படத்துக்காக சிம்பு என பெயர் வைத்துக் கொண்டார். விரல் வித்தை நடிகர் என ஆரம்பத்தில் கேலி செய்யப் பட்டாலும், அண்மையில் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படம், அனைத்து தரப்பினரிடமும் அவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது.
இந்நிலையில், தற்போது தன் பெயரில் ஒரு சிறிய மாற்றத்தை செய்யப் போகிறாராம் சிம்பு.
அண்மையில், வானம் படத்தின் படப்பிடிப்புக்காக அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பித்திருக்கிறார் சிம்பு. அப்போது அவரது முழு பெயரையும் எழுத வேண்டியிருந்தது. அதனால், சிலம்பரசன் தேசிங்கு ராஜேந்திரன் என தன் முழு பெயரை விண்ணப்ப படிவத்தில் எழுதினாராம் சிம்பு. இதனைப் படித்த தமிழ் தெரிந்த அதிகாரி ஒருவர், ‘நீங்கள் ஏன் எஸ்.டி.ஆர். என பெயர் வைத்துக் கொள்ளக் கூடாது?’ என்றாராம்.
எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர். போல இதுவும் கெத்தாக இருப்பதால் தன்னை இனி எஸ்.டி.ஆர். என்றே அழைக்க தன் ரசிகர்களுக்கு அன்புக் கட்டளை இட்டுள்ளாராம் எஸ்.டி.ஆர் (எ) சிம்பு (எ) சிலம்பரசன்.
Want to write for Maniyosai?
Download our android app


