பருத்தியைப் பூணுக்குள் பூட்டி வைக்கமுடியாது...’ என்பார்கள். ஏனென்றால் வெடிக்க வேண்டிய விஷயம் ஒருநாள் வெடித்தேத் தீரும். அதுதான் இப்பொழுது இன்னொரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது, தெலுங்கானா உருவத்தில்.
இந்தியா சுதந்திரமடைந்ததில் இருந்து நீறுப் பூத்த நெருப்பாக இருந்த விஷயம் இன்று வெடித்துக் கொண்டிருக்கிறது. இந்தியா சுதந்திரம் பெற்ற சமயம் நிஜாம் ஆட்சியின் கீழ் (princely state) ஆக இருந்த ஹைதராபாத் இந்தியாவுடன் இணைந்தது. பின்னர் தமிழ்நாட்டிலிருந்து ஆந்திராப் பிரிக்கப்பட்டப் போது ஹைதராபாத் ஆந்திராவுடன் இணைவதா வேண்டாமா என்ற பல சர்ச்சைகளுக்குப் பின் ஒரு வழியாக ஆந்திராவுடன் இணைந்தது. அன்றிலிருந்து இன்று வரை தனித் தெலுங்கானாப் பிரச்சினை நடந்துக்கொண்டும் இருக்கிறது.
Last Updated on Wednesday, 10 March 2010 19:47
Read more...