பாட்நா: குஜராத் மாநிலத்தில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் முஸ்லிம்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக, பிகார் மாநிலத்தின் பிரபல நாளிதழ்களில், குஜராத் அரசு வெளியிட்டிருக்கும் முழு பக்க வண்ண விளம்பரம் எதிர்கட்சிகளிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நிதிஷ் குமார் அரசு அமைந்து 4.5 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக பிகார் மாநிலத்திற்கு விஜயம் செய்ய உள்ளார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி.
அவர் நாளை (ஜூன் 12) பாஜக தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார். ஜூன் 13ம் தேதி பேரணி ஒன்றில் பங்கேற்க உள்ளார் நரேந்திர மோடி.
இந்நிலையில், குஜராத்தில் முஸ்லிம்கள் மிக மகிழ்ச்சியாக இருப்பதாக, பிகார் மாநிலத்தில் வெளியாகும் இந்தி, ஆங்கிலம், உருது நாளிதழ்களில், ஒரு முழு பக்க விளம்பரத்தை இன்று (ஜூன் 11) வெளியிட்டுள்ளது குஜராத் அரசு. அதில், குஜராத்தில் முஸ்லிம்கல் வாழ்க்கை தரம் பற்றிய புள்ளிவிவரங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த புள்ளி விவரங்கள் சச்சார் கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் அளிக்கப் பட்டுள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது.
இது குறித்து ராஷ்டிரிய ஜனதா தள பிகார் மாநில தலைவர் அப்துல் பாரி சித்திக்கி கூறுகையில், “குஜராத் அரசின் முழு பக்க விளம்பரம், 2002ம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான குஜராத் கலவரத்தை எங்களுக்கு நினைவு படுத்துகிறது.” எனக் கூறியுள்ளார்.
குஜராத் அரசின் முழு பக்க விளம்பரம் குறித்து காங். தலைவர்கள் அசோக் ராம் மற்றும் ராம்ஜத்தன் சின்ஹா கூறுகையில்,”மக்களை திசை திருப்பம் மோடி முயல்கிறார். நரேந்திர மோடியின் உண்மையான முகம் மக்களுக்கு தெரியும்.” என்றார்.
Want to write for Maniyosai?
Download our android app




