கோல்கத்தா: பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை எதிர்த்து எதிர்கட்சிகள் நடத்தும் முழு அடைப்பு போராட்டம் பற்றி தனக்கு கவலையில்லை என மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆணவத்துடன் தெரிவித்துள்ளார்.
கோல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரணாப் முகர்ஜி கலந்துக் கொண்டார். அப்போது பிரணாப் முகர்ஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“யார் வேண்டும் என்றாலும் பந்த் நடத்திக் கொள்ளட்டும். அது பற்றி எனக்கு கவலையில்லை. எதிர்ப்பை எப்படி காண்பிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் நினைக்கின்றனவோ அப்படி காண்பிக்கட்டும். முழு அடைப்பு போராட்டம் பற்றி நான் கருத்து கூற எதுவும் இல்லை. பெட்ரோலியப் பொருட்கள் விலை ஏற்றத்தை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடம் இல்லை.” இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.
Want to write for Maniyosai?
Download our android app





