புதுதில்லி: சமாஜ்வாதி கட்சியில் இருந்து அண்மையில் நீக்கப் பட்ட அமர்சிங், அக்கட்சி தன்னை குப்பைதொட்டி போல் பயன் படுத்தி வந்ததாக குற்றம்சாற்றியுள்ளார்.
இது குறித்து அமர்சிங் அளித்த பேட்டி விவரம்:
”சமாஜ்வாதி கட்சி என்னை குப்பைதொட்டி போல் பயன் படுத்தியது. அக்கட்சி பல தவறான முடிவுகளை எடுத்து விட்டு, பிரச்சினை எழுந்ததும் என் மீது பழி சுமத்தி வந்தது.
கட்சியின் அனைத்து முக்கிய முடிவுகளும், கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ்வாலும், அவர் உறவினர் ராம் கோபால் யாதவால் மட்டுமே எடுக்கப் பட்டு வந்தன. அவர்கள் எடுக்கும் முடிவுகளில் தவறு நிகழ நேர்ந்தால், மொத்த பழியும் என் மேல் சுமத்தப் பட்டு விடும்.”
இவ்வாறு அமர்சிங் கூறினார்.
Want to write for Maniyosai?
Download our android app





