புதுடெல்லி: காங்கிரஸ் ஆட்சியில் உணவு பாதுகாப்பிற்கும் மகளிர் இட ஒதுக்கீட்டுக்கும் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
பிரணாப் முகர்ஜி பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு இன்று (04/03/2010) உரையாற்றிய ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி இவ்வாறுத் தெரிவித்துள்ளார். பின்னர் பெட்ரோல் டீசல் விலையுயர்வைத் திரும்ப பெற இயலாது என்றும் தெரிவித்துள்ளார். எதிர்கட்சிகள் வேண்டுமென்றே விலையுயர்வு விவகாரத்தை அரசியலாக்கப் பார்க்கின்றன என வருத்தம் தெரிவித்த அவர் பூனா, காபூல் குண்டு வெடிப்புகளுக்கும் கண்டணம் தெரிவித்துள்ளார்.
Want to write for Maniyosai?
Download our android app




