புனே: விமானப்படைக்கு சொந்தமான சுக்ஹோய் -30 எம்கேஐ ரக போர் விமானம் ஒன்று இன்று (டிச.13) விழுந்து நொறுங்கியது .இதில் அதிர்ஷ்டவசமாக அதிலிருந்த இரண்டு விமானிகளும் உயிர் தப்பினர்.
சுக்ஹோய் -30 எம்கேஜே என்பது இந்திய விமானப்படையின் போர் விமானம் ஆகும். அது இன்று மதியம் 12.45 மணிக்கு (டிச.13) வழக்கமான சுற்றாக லோஹேகான் விமானநிலையத்திலிருந்து மேலே எழும்பி பறக்கத் தொடங்கியபோது 01.15 மணிக்கு எதிர்பாராதபடி விழுந்து நொறுங்கியது. அதிருஷ்டவசமாக விமானத்திலிருந்த விமான ஓட்டிகள் இருவரும் வெளியே தள்ளப்பட்டு பத்திரமாக தரையிறங்கினர்.
புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் கட்டுப்பாட்டை இழந்தது, கட்டுப்பாட்டு அறையின் தொடர்பையும் இழந்தது. ஆனால் விமான ஓட்டிகள் துரிதமாக செயல்பட்டு விமானத்திலிருந்து வெளியே குதித்தனர்.
இது தொடர்பாக புனே மாவட்ட ஆட்சியாளர் விகாஸ் தேஷ்முக் கூறுகையில் விமானம் காட்டுப்பகுதியில் மோதி விழுந்தவுடன் தீப்பற்றி எரிந்தது என்று குறிப்பிட்டார்.
ரஷ்யாவில் முதன்முதலில் அறிமுகமாகிய சு-30 ரக விமானம் விழுந்து நொறுங்கும் சம்பவம் இந்தியாவில் மூன்றாவது முறையாக நிகழ்கிறது. இந்தவகை விமானம் 1997-ம் ஆண்டு இந்திய விமானப்படையில் அறிமுகமாகியது.
இன்றைய விபத்து இந்த ஆண்டில் நிகழும் எட்டாவது விமானப்படை விமான விபத்தாகும்.
Want to write for Maniyosai?
Download our android app

