புதுதில்லி: மேற்கு தில்லியில் உள்ள முந்த்கா பகுதியில் இன்று (ஜன.4) கட்டடம் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலியாகியுள்ளனர்; 22 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
நிகழ்வுக்கான காரணம் சரியாக தெரியவில்லை. முதல் கட்ட விசாரணையில் சமையல் சிலிண்டர் வெடித்ததில் கட்டடம் இடிந்து விழுந்திருக்கலாம் என தெரிகிறது.
இறந்தவர்கள் அனைவரும் கட்டடத் தொழிலாளிகள் என தெரிகிறது.
படுகாயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
கட்டிட இடிபாடுகள் அகற்றிய பின்பே நிகழ்வுக்கான காரணம் தெரியும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Want to write for Maniyosai?
Download our android app

