உதகை - குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப் பட்டது.
ஊட்டியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று (நவ.27) இரவிலிருந்து மழை சற்று ஓய்ந்துள்ள நிலையில் இன்று (நவ.28) காலை சத்தியசாய் நகர் பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிகழ்வில் நல்வாய்ப்பாக உயிர்சேதமோ பொருட்சேதமோ ஏற்படவில்லை. ஆனால், மின்சார கம்பிவடம் மீது மரம் விழுந்ததால் பல பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப் பட்டுள்ளது.
நிலச்சரிவு காரணமாக உதகை - குன்னூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. அதனால் குன்னூரில் இருந்து ஊட்டி வந்த அனைத்து வாகனங்களும் லவ்டேல், கோத்தகிரி வழியாக திருப்பி விடப் பட்டது.
இதனால் அலுவகம் செல்வோர் பெரிதும் இன்னலுக்கு ஆளாகினர்.
Want to write for Maniyosai?
Download our android app

