maniyosai.com

You are here: Home செய்திகள் சம்பவம் சென்னை ஐஓபி வங்கியில் கொள்ளை

சென்னை ஐஓபி வங்கியில் கொள்ளை

E-mail Print
Share/Save/Bookmark

சென்னை: கீழ்கட்டளை இந்தியன் ஓவர்சீஸ் பாங்க் கிளையில் இன்று (பிப்.20) மதியம் துப்பாக்கி முனையில் கொள்ளை அடிக்கப் பட்டுள்ளது.

தமிழகத்தில் அண்மை காலமாக கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. சில நாட்களுக்கு முன் பெருங்குடியிலுள்ள பாங்க் ஆஃப் பரோடா கிளையில் கொள்ளை அடிக்கப் பட்டது. அந்த கொள்ளை சம்பவத்துக்கு காரணமானவர்கள் யாரென்று இது வரை தெரியவில்லை.

இந்நிலையில், கீழ்கட்டளை ஐஓபி வங்கி கிளையில் இன்று (பிப்.20) மதியம் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று காரில் வந்து இறங்கி, துப்பாக்கி முனையில் கொள்ளை அடித்து சென்றுள்ளது. சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர். அப்பகுதியில் வாகன சோதனையும் நடந்து வருகிறது.

கொள்ளை அடிக்கப் பட்ட பணம் எவ்வளவு என்பது இது வரை தெரியவில்லை.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%