கோல்கத்தா: ஆம்ரி மருத்துவமனையில் தீ விபத்து நிகழ்வு நடந்து சில நாட்களே ஆகியுள்ள நிலையில், மேற்குவங்க மாநிலத்தில் மற்றொரு விபரீதம் நடந்துள்ளது. கள்ளச் சாராயம் குடித்ததில் 35 பேர் உயிரிழந்துள்ளனர்; 100 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
இந்த கொடிய நிகழ்வு மொக்ரகாத் ஊரில் நடந்துள்ளது. இந்த நிகழ்வை தொடர்ந்து ஆத்திரமடைந்த உள்ளூர் மக்கள் சாராயம் காய்ச்சப் படும் குடில்களை அடித்து நொறுக்கினர்.
இந்த சம்பவம் குறித்து எஸ்.பி., லட்சுமி நாராயண் மீனாவிடம் நிருபர்கள் கேட்ட போது கள்ளச்சாராயம் குடித்தவர்களில் 100 பேர் வயிற்று வலி, வாந்தி, பேதி ஏற்பட்டதையடுத்து டைமண்ட் ஹார்பர், சங்ராம்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
இந்த நிகழ்வில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரண நிதி வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
Want to write for Maniyosai?
Download our android app

