maniyosai.com

You are here: Home செய்திகள் ஈழத் தமிழர்கள் மறு வாழ்வுக்காக இந்தியா மெனக்கெடவில்லை- இலங்கை அமைச்சர்

ஈழத் தமிழர்கள் மறு வாழ்வுக்காக இந்தியா மெனக்கெடவில்லை- இலங்கை அமைச்சர்

E-mail Print
Share/Save/Bookmark

tamil eelam கொழும்பு: இலங்கை சுதந்திரமான நாடு அதன் அரசியல் விவகாரங்களில் தனக்கென சிலக் கொள்கைகளை வைத்துள்ளது. இதில் எந்த நாடும் தலையிட முடியாது என இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி. எல். பெரிஸ் கூறியுள்ளார். சில தினங்களுக்கு முன்பு இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வந்திருந்தார். இலங்கையில் தமிழர்களை படுகொலை செய்தவர் இந்தியாவுக்கு வருவதா என பலதரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. இருப்பினும் வழக்கம்போல எதையும் பொருட்படுத்தாத மத்திய அரசு ராஜபக்சேவுக்கு சிறந்த வரவேற்பு அளித்தது. இலங்கை தமிழர்களுக்காகப் போராடி வருவதாகக் கூறிக்கொள்ளும் தமிழக முதல்வர் கருணாநிதியும் தான் நேரில் செல்லாமல் தனது எம் பிக் களை அனுப்பி மனு ஒன்றுக் கொடுத்தார். அப்பொழுது ஈழத் தமிழர்கள் மறுவாழ்வுக் குறித்து மிகத் தீவிரமாக பேச்சுவார்த்தை நடைப்பெற்றதாக இந்திய தரப்பிலிருந்து கூறப்பட்டது.

இந்நிலையில் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி. எல். பெரிஸ் ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் இலங்கைக்கு இந்தியா எந்தவித நெருக்கடியும் தரவில்லை. இருநாடுகளின் உறவும் திருப்திகரமாகவே இருக்கிறது எனக் கூறியுள்ளார். தமிழக எம் பிக்கள் சந்தித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டதறகு "ஈழத்தமிழர்கள் பிரச்சனையில் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் தீர்வு காணும் அரசியல் சாசன சட்டத் திருத்தம் குறித்து அப்போது பேசப்பட்டது'' எனத் தெரிவித்தார்.

மேலும் இலங்கையில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்காக இந்தியா ரூ.4700 கோடி இலங்கைக்கு கடன் தர முன்வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

03 March 2012, 19.55 தலைப்புச் செய்திகள்
இலங்கைக்கு இந்தியா ஆதரவு : வைகோ கண்டனம்
சென்னை: ஐ.நா., மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் அப்பாவி தமிழர்களைக்...மேலும்...
0 Comments , 197 Hits
02 April 2012, 13.32 தலைப்புச் செய்திகள்
மீனவர்கள் போர்வையில் விடுதலைபுலிகள் ஊடுருவல் : இலங்கை அரசின் புது கதை
கொழும்பு : மீனவர்கள் போர்வையில் தமிழகத்தில் ஆயுத பயிற்சி...மேலும்...
0 Comments , 51 Hits
22 March 2012, 21.00 தலைப்புச் செய்திகள்
இலங்கைக்கு எதிராக இந்தியா ஓட்டு : தீர்மானம் வெற்றி
ஜெனீவா: இலங்கையில் நடந்த போர் குற்றங்களுக்கு எதிராக ஐநா மனித உரிமை...மேலும்...
0 Comments , 166 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits