சென்னை: முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டில் கட்டட விதிமீறல் நடந்திருப்பதாக ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இதனைக் கண்டித்து நாளை (ஆக.28) சென்னையில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது குறித்து ஜெயலலிதா இன்று (ஆக.27) வெளியிட்டுள்ள அறிக்கை:
1967-ம் ஆண்டு தமிழக பொதுப்பணித் துறை அமைச்சராக பதவியேற்ற பிறகு, கோபாலபுரத்தில் உள்ள தனது வீட்டிற்கு பின்புறம் இருந்த சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 780 சதுர அடி நிலத்தை தன் வீட்டுடன் கருணாநிதி இணைத்து கொண்டார். சென்னை மாநகராட்சி விதிமுறைகளின்படி, 10,000 சதுர அடிக்கு மேலான கட்டடம் கட்டப்படும் போது, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக குறிப்பிட்ட காலி இடத்தை மாநகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும். ஆனால், தி.மு.க. தலைமையிடமான அண்ணா அறிவாலயம் கட்டப்படும் போது, மாநகராட்சி விதிமுறைப்படி காலியிடம் மாநகராட்சியிடம் வழங்கப்படவில்லை.
இவற்றைக் கண்டித்து வடசென்னை மாவட்ட அதிமுக சார்பில், 28.8.2010 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
Want to write for Maniyosai?
Download our android app





